2025 ஜூன் 18, புதன்கிழமை

மீனவர் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும்: எமிலியாம்பிள்ளை

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கேபிரசாத்

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு இருநாட்டு அரசாங்கங்களும் பேச்சு நடத்தி விரைவில் எமக்கொரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும். மீனவர்கள் பேசினால் எந்தவிதமான பயனும் கிடைக்கப்போதில்லை என்று யாழ் மாவட்ட கடற்தொழிலலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவகை;கையால் எமது மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் இப்பிரச்சனையை தீர்க்குமாறு இரு நாட்டு அரசுகளிடமும் கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையையும் இல்லை.

இந்த நிலையில் இந்திய துணைத்தூதுவர் இரு நாட்டு மீனவர் சாமாசங்களும் பேசித்தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையே இன்றி எமது பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியில்லை

2004 ஆம் ஆண்டு தொடக்கம் இருநாட்டு மீனவர்களும் இப்பிரச்சனை பற்றி பேசி வருக்கின்றோம் இறுதியாக கச்சைதீவிலும் பேசியிருந்தோம் இருந்தும் எவ்விதமான நன்மைகளும் ஏற்படவில்லை.

எனவே இந்த மீனவர் பிரச்சினைகளுக்கு இருநாட்டு அரசாங்கங்களும் பேசி விரைவில் தீர்வைக்கான முன்வர வேண்டும் இரு நாட்டு அரசாங்கத்திற்கும் இந்த மீனவர் பிரச்சனை தொடர்பான பேச்சு வார்த்தைகள் வடக்கில் இடம்பெறவேண்டும் என்பதையும் நான் வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்' என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .