2025 ஜூன் 18, புதன்கிழமை

அரச காணிகளில் குடியமர்ந்துள்ள இத்தாவில் பகுதி மக்களுக்கு காணி உறுதி: விமலராஜ்

A.P.Mathan   / 2013 ஜனவரி 18 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பூநகரி இத்தாவில் பகுதியில் அரச காணிகளில் குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு காணி உறுதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அதிகாரி என்.விமலராஜ் இன்று தெரிவித்தார்.

பூநகரி இத்தாவில் மற்றும் வெட்டுக்காடு பிரதேசத்தில் 30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியமர்ந்துள்ளார்கள். இவ்வாறு மீள்குடியமர்ந்த நிலையில் இருக்கும் காணிக்கு சொந்தமான 200 குடும்பங்கள் காணி உறுதிகளின்றி இருக்கின்றார்கள். அவ்வாறு இருப்பவர்களுக்கு காணி உறுதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .