2025 ஜூன் 18, புதன்கிழமை

துப்பாக்கி சூட்டில் இராணுவ வீராங்கனை காயம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 21 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

யாழ்ப்பாணம், அச்செழு இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இராணுவ வீராங்கனை ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சக வீராங்கனையின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததை அடுத்தே இந்த மேற்படி வீராங்கனை காயமடைந்துள்ளார் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

அச்செழு பிரதேசத்திலுள்ள 511 படைப்பிரிவு முகாமில் இன்று பிற்பகல் 2 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமித்ரா (வயது 33) என்ற வீராங்கனையே சம்பவத்தில் காயமடைந்தவராவார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இராணுவ வீராங்கனையை கைதுசெய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இராணுவ வீரர் ஒருவரை இரு இராணுவ வீராங்கனைகளும் காதலித்துள்ள வேளையில், தனது காதலனுடன் கதைக்க வேண்டாம் என கூறியே குறித்த இராணுவ விராங்கனை தனது சக இராணுவ வீராங்கனை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இராணுவ வீராங்கனையை இன்று மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .