2025 ஜூன் 18, புதன்கிழமை

புன்னாலைக்கட்டுவன் வாகன விபத்தில் மூவர் காயம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 21 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிசன், சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

தனியார் பேருந்துடன் இராணுவத்தினரின் தனியார் பேருந்து மோதியதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து புன்னாலைக்கட்டுவன் நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துடன் இன்று மதியம் 3.30 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் பயணிகள் தரிப்பிடத்தில் இறக்கிவிடும் போது பலாலியில் இருந்து இராணுவத்தினரை ஏற்றிவந்த பேருந்து நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், குரும்பசிட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் பத்மாராணி (வயது 38) ஊரெழு சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குணரத்னம் ரசிராஜ் (வயது 29) மற்றும் பேருந்து நடத்துனரான ஜெய்கணேஷ; (வயது 37) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .