2025 ஜூன் 18, புதன்கிழமை

வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் குறித்த கருத்துப்பட்டறை

Menaka Mookandi   / 2013 ஜனவரி 21 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


பாக்கு நீரிநிணையில் இந்திய இலுவைப் படகுகளின் செயற்பாட்டினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்த கருத்துப்பட்டறை இன்று திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்த விடயத்தில் ஆர்வமுள்ள கல்வியலாளர்கள், ஆய்வாளர்கள், கடற்தொழில் சமூகத்தினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

யுத்தகாலத்தில் கடலுக்குச் செல்லமுடியாதிருந்த கடற்தொழிலாளர்கள் தற்போது இந்திய டோலர்களின் வருகையால் தங்கள் தொழில சீரான முறையில் மேற்கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர்.

அத்துடன் மீனவர்களின் வளங்களும் அழிக்கப்படுவதோடு கடல் சூழலியல் வளங்களும் அழிவடைந்து செல்கின்றது இதனை எவ்வாறு தடுப்பது அதற்கு கையாள வேண்டிய பொறிமுறைகள் பற்றியும் அந்த கருத்துப்பட்டறையில் ஆராயப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .