2025 ஜூன் 18, புதன்கிழமை

போர்ச் சிந்தனையில் இருந்து அனைவரும் விடுபடவேண்டும்: யாழ் பல்கலை துணைவேந்தர்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 21 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

முப்பது வருட யுத்த சிந்தனையில் இருந்து நாங்கள் அனைவரும் விடுபட வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வி அரசரெட்ணம் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய இலுவைப்படகுகளின் செயற்பாட்டினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்த கருத்துப்பட்டறை ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிக்கையில்
முப்பது வருட யுத்த்திற்கு முன்னர் இருநாட்டு மீனவர்களிடத்திலும் ஒரு புரிந்துணர்வு இருந்து வந்துள்ளது இதன் காரணமாக இங்குள்ளவர்கள் தென்னிந்தியாவிற்கு சென்றும் அங்குள்ளவர்கள் இங்கு வந்தும் தொழில் செய்யக் கூடிய நிலை இருந்தது. பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அந்த புரிந்துணர்வுத்தன்மை அற்றுப்போய்விட்டது என்றார்.

அத்துடன் முப்பது வருட யுத்த சிந்தனையில் இருந்து நாங்கள் அனைவரும் விடுபடவேண்டும் அவ்வாறு விடுபட்டு இந்த மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்கான அரசியல் வாதிகள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் இந்த பிரச்சனைக்கு முகம்கொடுத்து வருகின்ற  ஒன்றாக இணைந்து இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .