2025 ஜூன் 18, புதன்கிழமை

வாகன விபத்தில் நால்வர் காயம்

Kogilavani   / 2013 ஜனவரி 24 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கன்டர் ரக வாகனமொன்று முச்சக்கர வண்டியில் மோதியதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இனுவில் பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இருபாலையில் இருந்து இணுவில் பகுதிக்கு பயணித்த  முச்சக்கரவண்டியொன்றே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் சின்னத்தம்பி நாகராசா (வயது 32),  இருபாலை செல்லமணி புஸ்பலீலா (வயது 47),  உதயகுமார் ரூக்குமணி தேவி (வயது 43), வெ.தர்சனா (வயது 3) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்களில் முச்சக்கரவண்டி சாரதியின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .