2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். கடற்றொழில் திணைக்களத்திற்கு படகுகளும் இயந்திரங்களும் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 24 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கு 15 படகுகளும் 15 இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டிற்கென கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சால் ஒதுக்கப்பட்ட 26 மில்லியன் ரூபா நிதியில் யாழ். மாவட்டத்தில் கடற்கரை பிரதேசங்களில் பொதுமண்டபங்கள் மற்றும் சந்தைகள் உட்பட பல்வேறு தேவைகளுக்கான 8 கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. எஞ்சிய நிதியிலிருந்தே படகுகளும் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரியொருவர் இன்று தெரிவித்தார்.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள 15 படகுகளும்; 15 இயந்திரங்களும்; மீள்குடியமர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .