2025 ஜூன் 18, புதன்கிழமை

'சிறுவர் உரிமை தொடர்பாக அறிக்கையிடுதலும் பதிலளித்தலும்' கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஜனவரி 25 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


சிறுவர் உரிமை தொடர்பாக அறிக்கையிடுதலும் பதிலளித்தலும் தொடர்பில் பிரதேச மட்ட சிறுவர்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மற்றும் கிளிநொச்சி இணைப்பாளர் த.கனகராஜ் ஏற்பாட்டில் கண்டாவளை பிரதேச செயலாளர் முகுந்தன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதேச மட்டத்தில் சிறுவர்கள் உள்ள கிராமங்களை அடையாளப்படுத்தி களஆய்வு, சிறுவர் உரிமைகள் தெடர்பாக விழிப்புணர்வு வழங்குதல், சிறுவர் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் எவ்வாறு முறைப்பாடுகளை பதிவு செய்தல், சிறுவர் இல்லங்கள், சிறுவர் தடுப்பு நிலையங்களுக்கு விஜயம் மேற்கொள்ளல் போன்ற விடயங்களை செயற்படுத்துதல் குறித்து சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி சிறுவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .