2025 ஜூன் 18, புதன்கிழமை

தாக்குதல் சூத்திரதாரிகளின் புகைப்படங்களை அடையாளம் காட்ட வைத்தியர் மறுப்பு: டி.ஜ.ஜி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 25 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காது, மூக்கு, தொண்டை வைத்திய வைத்திய நிபுணரின் தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிலரின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்ட நிலையில் வைத்தியர் அடையாளம் காண்பிக்க தவறுகின்றதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்தியர் திருமாறன் தாக்கப்பட்டமை குறித்து மேலதிகமாக எவரேனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்களா என  ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். தலைமைப்பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமராராய்ச்சி கொழும்பிற்கு சென்று சில சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வைத்தியரிடம் காண்பிக்கப்பட்ட வேளையில், வைத்தியர் சரியான பதில் கூற மறுத்து விட்டதாகவும்,  சம்பவத்தில் சில தினங்களில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் மீதான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றதாகவும், விரைவில் மற்றைய இரு சந்தேக நபர்களையும் கைதுசெய்வுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .