2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 27 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


இந்தியாவின் 63 குடியரசு நிறைவு தின நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. நேற்று மாலை 7.30 மணிக்கு காங்கேசன்துறை வீதியில் உள்ள செல்வா மண்டபத்தில் இந்தியதுணைத்தூதுவர் வே.மகாலிங்கம் தலைமயில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதீதியாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இரவு விருந்தும் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ் அரச அதிபர்,யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் நீதிபதிகள்,பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தொழிலதிபர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .