2025 ஜூன் 18, புதன்கிழமை

புனர்வாழ்வு பெற்றோருக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 ஜனவரி 29 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு பெற்றவர்களிற்கான பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு காரியாலயத்தின் இணைப்பாளர் மேஜர் ஜெகத் குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தினால் அங்கவீனமடைந்தவர்களுக்கு சமூக சேவை திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற 3000 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

யாழ் மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்படும் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுத்திட்டம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புனர்வாழ்வு அமைச்சர் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஆகியோரின் வழிகாட்டலில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .