2025 ஜூன் 18, புதன்கிழமை

மக்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்த அரசு முயற்சி: சிறிதரன்

Super User   / 2013 ஜனவரி 30 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


மக்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்தி எங்கள் அரசியலைத் தடுக்கும் நோக்கத்தில் அரசாங்கத்தினால் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு அங்கமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகம் மீதான சோதனை நடவடிக்கையும் கைதுகளும் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கிளிநொச்சி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலார் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

"கிளிநொச்சியில் உள்ள தனது அலவலகத்தில் சோதனையிடுவதற்காக பயங்வரவாத பிரிவினைச்சேர்ந்த   35 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 12 ஆம் ;திகதி வருகைதந்தது அங்கிருந்ததாக ஆணுறைகள் மற்றும் ஆபாசப்பட சீடிக்கள்,வெடிமருந்து போன்றன மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அநாகரிமான செயற்பாடுகள் குறித்து சபாநாயகர்,மற்றும் சர்வதேச பாராளுமன்றக் குழு,சர்வதேச பாராளுமன்றத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.

பயங்கரவாத படுப்பு பிரிவினரால் அங்கு மீட்கப்ட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவேண்டிய முக்கியமான ஆவணங்கள் இருந்தபோதும் அரசுக்கு ஆதரவாகச் செயற்படும் ஊடகங்களில் இது எவ்வாறு வெளியில் என்று தெரியவில்லை.
அங்கு மீட்கப்பட்ட பொருட்கள் என்று துண்டுப்பிரசுரம் அடித்து புலனாய்வாளர்களும், ஈபிடிபியினரும் மக்களிடமும் பாடசாலை மாணவார்களிடமும் விநியோகித்து வருகின்றனர்.

மக்களை எங்களிடம்  இருந்து அந்நியப்படுத்தி எங்கள் அரசியலைத் தடுக்கும் நோக்கத்தில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே இந்த நடவடிக்கையாகும். இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கமும்  அதனோடு சேர்ந்து இயங்கும் குழுவினருமே முன்னெடுக்கின்றனர்  என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை முடக்கி எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று அனைத்து மாகாணத்திலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. ஏவ்வாறான அழுத்தங்கள் தடைகள் வந்தாலும் தமிழ் தேசியம்,சுயநிர்ணய உரிமைக்கான எங்கள் பயணம் தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .