2025 ஜூன் 18, புதன்கிழமை

'நல்லிணக்கத்திற்கான நிலையம்' முள்ளியவளையில் திறப்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


'ஒன்று கூடுவோம் இலங்கை' அமைப்பின்  ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளைப் பகுதியில் 'நல்லிணக்கத்திற்கான நிலையம்' ஒன்று திறந்துவைக்கப்பட்டது.

போருக்குப் பிந்திய காலத்தில் இளைஞர், யுவதிகளிடம் தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆங்கில அறிவை விருத்தி செய்யும் நோக்கில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வின் பிரதம அதிதியாக, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்காசியாவுக்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் கலந்துகொண்டு நிலையத்தை திறந்துவைத்தார்.

தொடர்ந்து இந்த 'நல்லிணக்கத்திற்கான நிலையத்தில் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலக் கல்வியை பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானித்தூதுவர் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். 'ஓன்று கூடுவோம் இலங்கை' அமைப்பின்  முதலாவது நல்லிணக்கத்திற்கான நிலையம்' இது என்பது குறிப்படத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .