2025 ஜூன் 18, புதன்கிழமை

மருத்துவரின் கைது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மருத்துவர் சிவசங்கரின் கைது தொடர்பாக மாங்குளம் பொலிஸாரிடம் அறிக்கை பெறப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி கொக்காவில் இராணுவ முகாமில் அத்துமீறி நுழைந்ததாக மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மருத்துவர் சிவசங்கர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரால் மருத்துவருக்கு எதிராக முன்வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் மருத்துவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தினை அறிக்கை மூலம் சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்தமைக்கு ஏற்ப மாங்குளம் பொலிஸ் அத்தியட்சகரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் மருத்துவர் சிவசங்கரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பு வாக்குமூலங்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வாக்குமூலங்களின் அடிப்படையில் மருத்துவரின் கைது குறித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும், இவ்விசாரணை விரைவில் மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .