2025 ஜூன் 18, புதன்கிழமை

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவின் மாவை, கலட்டி குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பம்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 02 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாவை, கலட்டி பகுதிகளில் ஐ.நாவின் அகதிகள் உயர்தானிகராலயத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு இந்த திட்டங்களை ஆரம்பித்துவைத்தனர்.

40 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த குடிநீர்விநியோகத்திட்டத்தின் மூலம் 290 குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.

அதேவேளை ஐ.நாவின் அகதிகள் உயர்தானிகராலயத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பொது நோக்கு மண்டபமும் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .