2025 ஜூன் 18, புதன்கிழமை

படையினர் தாக்கியதாக குடும்பஸ்தர் பொலிஸில் முறைப்பாடு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வீட்டில் தனியாக இருந்த குடும்பஸ்தர் மீது படையினர் மேற்கொண்டத்தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் குடும்பஸ்தர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் மீது 10 இராணுவத்தினரே  பொல்லால் தாக்கியதாக யாழ் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் குருநகர் 5 ஆம் மாடிப் பகுதியைச் சேர்ந்த எட்வேட் நியூட்டன் (வயது 40) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருநகர் பகுதியில் வீட்டொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் தனியாக வாழ்ந்துவருகின்றார் அவரது வீட்டுக்குள்  நேற்றிரவு வேளையில் அத்துமீறி நுழைந்த 10 இராணுவத்தினர் குடும்பஸ்தர் மீது பொல்லால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களில் 8 பேர் சுற்றி அவரை சுற்றி வளைத்துக் கொண்டதாகவும் ஏனைய இருவரும் அவரை பொல்லால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினர் தன்மீது தாக்குதல் நடத்தியபோது தான் கூச்சலிட்ட தாவும் அபாயக்குரல் கேட்டு  அயலில் இருந்தவர்கள் தன்வீட்டுக்கு விரைந்துவந்து ஏன்? தாக்குகின்றீர்கள் என இராணுவத்தினரின் வினவினர். அப்போது அவர்களை இராணுவத்தினர் தகாத வார்த்தைகளினால் பேசி விரட்டிவிட்டதாக தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அயலில் இருந்தவர்கள் தன்னை யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதித்ததாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • aj Wednesday, 06 February 2013 02:25 PM

    நாளுக்கு நாள் இராணுவ அடக்குமுறை தொடர்கிறது. அதன் ஒரு வடிவமே இதுவும் ஓன்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .