2025 ஜூன் 18, புதன்கிழமை

ஏழாலையில் இளைஞரை காணவில்லை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நேற்று இரவு முதல் காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த வரதராஜா ஜெகசதீஸ் (வயது 25) என்ற இளைஞரையே காணவில்லை என காணாமல் போனவரின் சகோதரியினால் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவர் யாழ். கலட்டி பகுதி மின் உருக்கு கடை ஒன்றில் வேலை செய்பவர் என்றும் நேற்று காலை வேலைக்கு சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என மேற்படி முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .