2025 ஜூன் 18, புதன்கிழமை

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியை நிறுத்த கோரி கண்டன பேரணி

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


இந்திய மீனவர்களின் இலுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடியை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கண்டன  பேரணி நடத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் இந்த ஆர்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் இலுவைப்படகுகளின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தக்கோரி இடம்பெயர்ந்தோர் மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவனால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபவனி இன்று பருத்தித்துறை நகரத்தை வந்ததடைந்தது.

இந்த நடைபவனிப் போராட்டத்திற்கு ஆதரவாக வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சமாசத்தினால் ஆர்ப்பாட்டப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டத்தின் போது வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சமாசத்தினால்  பாதுகாப்பு அமைச்சு, அமைச்சர் டக்களஸ் தேவானந்தா, யாழ்.அரச அதிபர், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பருத்திதுறை 521 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டப்பேரனியில் 250இற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .