2025 ஜூன் 18, புதன்கிழமை

நயினாதீவு நாகவிகாரைக்கு செல்வதற்கான புதிய இறங்குதுறை திறப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


நயினாதீவு நாகவிகாரைக்கு செல்லுவதற்கான புதிய இறங்குதுறை நேற்;று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

35 மில்லியன் ரூபா செலவில் கடற்படையினரின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இந்த புதிய இறங்குதுறை நாகவிகாரையில் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, கடலுக்குள் அமைக்கப்படவுள்ள புத்தர் சிலையின் அமைவிடத்தினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார்
இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய, பொலிஸ்மா அதிபர், கடற்படை தளபதி, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .