2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் விடுவிப்பு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தை சேர்ந்த  மாணவர்கள் இருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் வைத்தே இவ்விருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரச ரட்ணம் உறுதிப்படுத்தினார்.

மாணவர்களை விடுதலை செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை அடுத்து மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவருமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரையின் இறுதியில் மாணவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
(படங்கள்:பிரியந்த ஹேவாகே)



You May Also Like

  Comments - 0

  • Kumaran Kiruba Wednesday, 13 February 2013 07:45 AM

    அடிச்சு உதச்சு பின்னா் கி்ஸ் பண்ணி தடவும் நாடகம்தான் இது.
    குமரன்

    Reply : 0       0

    Karuna Wednesday, 13 February 2013 01:53 PM

    வரவேற்கிறேன், நல்லவை நடக்கட்டும்.

    Reply : 0       0

    SHAN NALLIAH Wednesday, 13 February 2013 02:05 PM

    நன்றி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .