2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

புடவை வியாபாரிகள் இருவர் கைது

Super User   / 2013 மார்ச் 21 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புடவைகளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

யாழ். காங்கேசன்துறை வீதியில் வைத்து பல இலட்சம் பெறுமதியான புடவைகளை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தலைமையிலான யாழ். விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடம் இருந்து 20 மேற்பட்ட புடவை பொதிகளும் புலனாய்வு பொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களையும், மற்றும் புடவை பொதிகளையும் நாளை யாழ். நீதமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .