2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது: மாவை சேனாதிராஜா

Kogilavani   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

'வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஐனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கடந்த 2009 ஆண்டு ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்துவிட்டோம் என்று கூறிய அரசாங்கம் இந்நாட்டில் இருந்து 'தமிழன்' என்ற இனத்தையே இல்லாதொழிக்கின்ற நடவடிக்கையில் அவர்களது நிலத்தையும் அபகரிக்கின்ற தீவிர நடவடிக்கைகளில் ஈடடுபட்டு வருகின்றது.

இதனை இராணுவத்தின் மூலமாகவும் பௌத்த மதத்தின் ஊடாகவும் மேற்கொண்டு வருகின்றது.

இதனை நாம் இன்று நேரடியாக அனுபவித்து வருகின்றோம். இதற்கு எதிராக ஐனநாயக வழியில் நாம் குரல் கொடுத்த போதும் போராட்டங்களை நடத்திய போதும் அதனை இராணுவ ரீதியில் அடக்குகின்ற நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணி செய்யமுடியாத அளவிற்கு அரசு இராணுவத்தினரை ஏவிவிடுகின்றது.
இவ்வாறு ஏவிவிடப்படுகின்ற இராணுவத்தினர் ஐனநாயக வழியில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருந்து வருகின்றனர்.

இதற்கு சான்றாகவே கிளிநொச்சியில் இராணுவத்தினராலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினராலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அமைந்துள்ளன.

இந்த தாக்குதலின் நோக்கம் ஐனநாயக ரீதியில் செயற்படுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைத் தடுப்பதாகாத்தான் அமைகின்றது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .