2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

வெடி பொருட்களுடன் கைதானவர்கள் பிணையில் விடுதலை

Kogilavani   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வெடிபொருட்களுடன் கைதான ஐவரை பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த வருடம் முழங்காவில் பகுதியில் சி-4 ரக வெடிபொருட்களுடன் குருநகர் பகுதியைச் சேர்ந்த 5 பேர் முழங்காவில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கான பிணை விண்ணப்பம் நேற்று யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மேற்படி ஐவரையும் தலா 2 லட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .