2025 ஜூன் 18, புதன்கிழமை

புலிகளிடம் மீட்ட பொருட்கள் எங்கே' யாழில் சுவரொட்டிகள்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 07:32 - 1     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் எங்கே?' என்று கேள்வி எழுப்பிய சுவரொட்டிகள் பல, யாழ்ப்பாணம் நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

ஊழல் எதிர்ப்புக்குரல் என்ற அமைப்பினால் உரிமை கோரப்பட்ட இந்த சுவரொட்டிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம், பணம் மற்றும் கப்பல்கள் எங்கே என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

யாழ். பஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள யாழ். மின்சார நிலைய வீதி உள்ளிட்ட சில வீதிகளிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இருப்பினும் இவற்றில் பல இனந்தெரியாதோரினால் கிழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 1

  • meenavan Sunday, 28 April 2013 11:57 AM

    பாதுகாப்பு செயலாளரே இது உங்கள் மேலான கவனத்திற்கு... பதில் கிடைக்குமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .