2025 ஜூன் 18, புதன்கிழமை

மேதின கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு யாழ். மக்களுக்கு ஜே.வி.பி அழைப்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


கொழும்பில் நடைபெறவுள்ள மேதின கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணியினரால், யாழ்ப்பாண மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு அடங்கிய சுவரொட்டிகள் பல யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வேறு பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

எதிர்வரும் மே முதலாம் திகதி மாலை 3.30 மணியளவில், தெகிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள ஜே.வி.பி.யினரின் மே தின ஊர்வலம், கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் நிறைவு பெறுவதுடன் அங்கு மே தின கூட்டம் நடைபெறும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மேதின கூட்டத்தில் யாழ். மக்களையும் அணிதிரளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .