2025 ஜூன் 18, புதன்கிழமை

மானிப்பாயில் படைமுகாம் அமைக்க தனியார் காணி சுவீகரிப்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ் - மானிப்பாய் பிரதான வீதியில் உள்ள கூழாவடிப் பகுதியில் இராணுவத்தின் 11ஆவது சிங்க படைப்பிரிவுக்கான நிரந்தர முகாம் அமைப்பதற்கு தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் கொண்ட காணி படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
 
காணி சுவிகரிப்புச் சட்டத்தின் அத்தியாயம் 460 (2)ஆம் பிரிவின் கீழ் இக்காணி சுவிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட காணி சுவிகரிப்பு உத்தியோகஸ்தர் சிவசுவாமியினால் கையொப்பமிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று அக்காணி அமைந்துள்ள பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த காணியில் நீண்ட காலமாக இராணுவத்தின் முகாம் இருந்து வருகின்ற நிலையில், அதில் நிரந்தர படைமுகாம் அமைக்கும் நோக்கில் இந்த காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணியின் உரிமையாளர்கள், அக்காணிக்கு அண்மையிலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாவட்டத்தில் கடந்த வாரம் 6,531 ஏக்கர் காணி, வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ளதால் இதற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .