2025 ஜூன் 18, புதன்கிழமை

வடமாகாண முஸ்லிம்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண முஸ்லீம் மக்களின் நலன்கருதி காணி மற்றும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ரீ.எம்.றொசான் தெரிவித்தார்.

நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கடந்த 26ஆம் திகதி யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை, வடமாகாண முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள் மற்றும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த கோரிக்கைகளின் பிரகாரம் மே மாதம் நடுப்பகுதியில், நடமாடும் சேவையினை நடத்தி காணி மற்றும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாக குறைகளை நிவர்த்தி செய்யப்படுமென்று உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த நடமாடும் சேவையில் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் உட்பட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாறூக் உட்பட பல முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .