2025 ஜூன் 18, புதன்கிழமை

கஜேந்திரகுமாரின் வீட்டில் முகமூடி நபர்கள் நடமாட்டம்

Super User   / 2013 மே 02 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்குள் முகாமூடி அணிந்த நான்கு பேர் புகுந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வாரசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மே தினமான நேற்று  புதன்கிழமை நான்கு மணியளிவில் சென்ற முகமூடி அணிந்த நான்கு நபர்கள் அங்கிருந்த உதவியாளரிடம் கஜேந்திரகுமார் எங்கே என்று விசாரித்துள்ளதுடன் கட்சியின் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் படம் பிடித்துச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் தம்மை பிறர் அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் தலைக்கவசம் அணிந்தவாறு தமது வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு நடந்தே வீட்டிற்குள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .