2025 ஜூன் 18, புதன்கிழமை

ஸ்ரெப்ஸ் நிறுவனத்தின் வளநிலையம் திறப்பு

A.P.Mathan   / 2013 மே 12 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்
 
அவுஸ்திரேலிய அரசாங்க நிதி நிறுவனத்தின் நிதியுடன் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஸ்ரெப்ஸ் நிறுவனத்தின் வள நிலையம் நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, ஜேர்மன் தூதுவர் டொக்டர். ஜே.மொஹாட் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.
 
ஒரே நேரத்தில் 120 பேரை பயிற்றுவிக்கக்கூடிய 6 வகுப்பறைகள், நிர்வாக அறை, பயிற்றுநர் அலுவலக அறை ஆகியவற்றுடன் கூடிய கட்டிடத் தொகுதியே திறந்து வைக்கப்பட்டது.
 
பொருளாதார கூட்டுறவு அபிவிருத்திக்குமான ஜேர்மன் அமைச்சு, அவுஸ்திரேலியா அரசாங்க நிதி நிறுவனம், மற்றும் வடமாகாண சபை ஆகியவற்றின் நிதி, திட்டமிடல் மூலம் ஸ்ரெப்ஸ் நிறுவனமானது இயங்கி வருகின்றது.
 
ஸ்ரெப்ஸ் நிறுவனமானது, அரச உத்தியோகத்தர்களுக்கு தொழில்சார் அபிவிருத்திக்கு தேவையான திறன்களையும், நல்லாட்சி, தொடர்பாடல், நுண்சிந்தனை ஆற்றல், முகாமைத்துவ திறன் ஆகியவற்றினை ஆங்கிலத்தினூடாக விருத்தி செய்வதனை மேற்கொண்டு வரும் நிறுவனமாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .