2025 ஜூன் 19, வியாழக்கிழமை

'மாகாண சபையின் அதிகாரத்தின் மூலம் எவ்வாறு நல்வழி ஏற்படுத்தமுடியும்'

Kogilavani   / 2013 மே 23 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'பிரதேச சபைகளுக்குள்ள அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை செய்யமுடியாத சூழ்நிலையில், மாகாண சபையின் அதிகாரத்தின் மூலம் எந்த வகையில் அவர்களுக்கான நல்வழியினை ஏற்படுத்த முடியும்? என காரைநகர் பிரதேச சபை உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினருமான கணேசபிள்ளை பாலசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் 22வது மாதாந்த கூட்டம் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் இக்கூட்டத்தில், பிரதேச சபைக்கு உட்பட்ட அரச காணிகளை வன்னியில் இருந்து அகதிகளாக வெளியேறிய மக்களுக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இப்பிரேரணை காரைநகர் பிரதேச சபை தலைவர் வேலாயுதம் ஆணைமுகன் உட்பட உறுப்பினர்களினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .