2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சட்டவிரோத மின்பாவனையாளர்களுக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2013 மே 23 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சட்டவிரோத மின்பாவனையாளர்கள் 5 பேருக்கு 50,000 ரூபா அபராதம் விதித்து யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்தார்.

இவர்களை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த 5 பேருக்கும் அபராதம் விதித்தார்.
ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபா படி 5 பேருக்கும் 50,000 ரூபா அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மின் கம்பிகளில் மின் கொழுக்கிகளை கொழுவி மின்சாரம் பெற்ற இந்த 5 பேரையும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைதுசெய்ததாக  யாழ். பொலிஸ் நிலைய சட்டவிரோத குற்றப்பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .