2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நிறுத்தல் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 மே 23 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலி. தெற்கு உடுவில் பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தைகளில் பயன்படுத்தப்படும் தராசுகள், படிகள் மற்றும் இலத்திரனியல் தராசுகள் உட்பட ஏனைய நிறுத்தல் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் எதிர்வரும் 27ம் திகதி முதல் அடுத்தமாதம் 7ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.

யாழ் மாவட்ட அளவீடுகள் அலகுகளும் நியமங்களும் சேவைகளும் தினைக்களத்தினால் மேற்க்கொள்ளப்படவுள்ள இந் நடவடிக்கை உடுவில் பிரதேச சபையின் உப அலுவலகங்களில் இடம் பெறவுள்ளன.

27ஆம் திகதியில் இருந்து 30ஆம் திகதி வரை உடுவில் பிரதேச சபையின் மருதனார்மடம் சந்தியில் உள்ள உடுவில் பிரதேச சபை உப அலுவலகத்திலும் 3ஆம் திகதியில் இருந்து 7ஆம் திகதி வரை உடுவில் பிரதேச சபையின் சுன்னாகம் உப அலுவலகத்திலும் இடம்பெறவள்ளன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .