2025 ஜூன் 19, வியாழக்கிழமை

உடுவில் மக்களுக்காக நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2013 மே 23 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவையொன்றை நடத்துவதற்காக முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்டபட்டவர்களின் பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் திருமணப் பதிவுகளை மேற்க்கொள்ளதவர்கள் மற்றும் இறப்புக்களை பதிவு செய்யாதவர்கள் சம்பந்தமான விபரங்கள் கிராம அலுவலர்களினால் திரட்டப்பட்டு வருவதுடன் தேசிய அடையாள அட்டை பெறாதவர்களின் விபரங்களும் பெறப்பட்டு வருகின்றன.

பிறப்ப பத்திரம் இல்லதவர்கள் மற்றும் அவர்களுக்கு உரிய இடங்களில் பிறப்ப பதிவு செய்யப்பட்டுள்ளதா போன்ற விபரங்கள் பெறப்பட்ட பின்னர் பிறப்புகள் பதிவு செய்து சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய செயல்பாடுகளுக்காக கிராம அலுவலர்களினால் படிவஙகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் இதனை பொது மக்கள் பெற்று பிறப்பச் சான்றிதழ்களை பெற முடியும் எனவும் கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .