2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பொருளாதாரத்தில் இலங்கை மீண்டெழுந்துள்ளது: டக்ளஸ்

Kanagaraj   / 2013 மே 23 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


பயங்கரவாதத்தை தோற்கடித்ததின் பின்னர் பொருளாதாரத்தில் இலங்கை பாரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நோர்வே தேசிய தின வைபவத்தில் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

நோர்வே இராஜ்ஜியத்தின், தேசிய தினத்தில் இந்த மங்கலகரமான நிகழ்வின் போது, இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில், உண்மையில் எனக்கு இது ஒரு கௌரவத்தை அளிக்கின்றது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பிலும், இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களினதும் சார்பிலும் இந்த நினைவில் வைக்கத்தக்க நேரத்தில் மேன்மை தங்கிய ஹரால்ட் ஏ மன்னர். நோர்வே அரசாங்கம், மற்றும் நோர்வே மக்களுக்கும் நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

1950ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று, இலங்கைக்கும் நோர்வேயிற்கும் இடையே முறைசார்ந்த இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் இலங்கைக்கு நிதியளித்தல் அபிவிருத்தி செயற்நிகழ்ச்சித் திட்டங்கள் முதல் முறையாக நோர்வே ஆரம்பித்த 1967 ஆண்டுக்கு இருநாடுகளுக்கும் இடையேயான, பங்குடமை, பின்னோக்கப்படுகின்றது.

 ஒரு அபிவிருத்தி ஒத்துழைப்பு உடன்படிக்கை ஊடாக, 1976 ஆம் ஆண்டில் ஒரு அபிவிருத்திப் பரிமாணத்துடன் இந்த பொருளாதாரப் பங்குடமையானது முறைசார்ந்த ஆக்கம் பெற்றது. ஒரு Nழுசுயுனு அலுவலகம் நிறுவப்பட்டதன் பின்பு, 30 ஆண்டுகளுக்கு, நோர்வே அபிவிருத்தி உதவிகள் தொடர்ந்தது. மற்றும் கொடைகளாக 700 மில்லியன் டொலர்களாக அமைந்தது. 


இதேநேரத்தில் நோர்வேயில், நீடித்து நிற்கின்ற வியாபாரப் பங்குடமைகளை, அபிவிருத்தி செய்வதற்கு வெற்றிகரமான வியாபார பொருத்தம் பார்க்கும் செயற்திட்டங்கள், இலங்கை கம்பனிகளுக்கு அனுகூலங்களை வழங்கியுள்ளது. ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக, நோர்வேயிற்கும், இலங்கைக்கும் இடையேயான, உறவுகள் செழிப்புற்றதும் மற்றும், அரசியல் பொருளாதார மற்றும் கலாசார செயற்களத்தில், விரிவாக்கம் பெற்றதுமாகும். 

இலங்கையின் சமாதான பொறிமுறையை நோர்வேயின் அனுசரணை துணைசெய்வது, ஆனது நாட்டில் பல்வேறுபட்ட கருத்துக்களை உருவாக்கிய அதேசமயம், இருநாடுகளுக்கும் இடையே ஆன நெருங்கிய உறவுகளை, தெளிவுபடுத்திக் காட்டுகின்றது.

புதுப்பித்த பொருளாதார பங்குடமையைத் தொடர்ந்து அரசியல் செயற்களத்தில், எங்கள் உறவுகளை மீளவரைவிலக்கணம் செய்வதற்கான பொருத்தமான நேரம் இது. அண்மைய கடந்த காலத்தில், உயர்அரசியல் மட்டத்தில் உறவாடல்களுடன், இந்த அரசியல் உறவுகள் பெறுமதி வாய்ந்ததொரு உந்துவிசையாக அமைந்துள்ளது.

பயங்கரவாதத்தை தோற்கடித்ததின் பின்னராக, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மீட்டெழுச்சியும். மற்றும் இலங்கையானது ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாடாக வினைத்தகுதி பெற்றதும், எங்கள் உறவுகளில் பொருளாதார, வர்த்தக, பரிமாணங்கள் ஆவன கூடிய முழுக்கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாட்டில் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையின் விடியலுடன், இலங்கையின் சுற்றுலாப் பயணத்துறை விரைவியக்கம் மிக்க வளர்திறம் அடைந்தது என்பதை குறிப்பிட நான் சந்தோஷப்படுகின்றேன்.

மக்களிடையே தொடர்புகள் அதிகரித்ததும் கனிவான விருந்தோம்பலையும், வெப்பமான சீதோஷனத்தை அனுபவிப்பதற்கும், நாட்டிற்கு நோர்வேயிலிருந்து அதிகரித்த எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர். 

2013 ஆம் ஆண்டில், உலகத்திலே மிகப் பாரிய பிரயாண வழிகாட்டி நூல் லோண்லி பிரேன்ட் மற்றும் இலக்க முறை ஊடக பதிப்பாளரும், விஜயம் மேற்கொள்வதற்கு இலங்கையானது, மிகச்சிறந்த நாடாக, வகுப்படுத்தியது. எங்கள் சான்றுறுதிப்படுத்திய சுற்றுலாப் பயணத்துறை சேருமிடங்கள், கானக உயிரினங்கள், அழகான இயற்கைக் காட்சி பொழிவுடைய, மணம் மற்றும் உடம்பின் நல் ஆரோக்கியம், விளையாட்டுக்கள் மற்றும் எளிமை ஊட்டுகின்ற கலாசார வகை திரிவு வளம் ஆகியவை செழிமைப்படுத்தியது.

உயர்கல்வித்துறைகளில், இலங்கைக்கும் நோர்வேக்கும் வியப்பூட்டுகின்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.  இலங்கையிலிருந்து ஒரு எண்ணிக்கையான மாணவர்கள், நோர்வேயிலுள்ள கல்வி வசதிகளை பெறுகிறார்கள். இருநாடுகளுக்கிடையே தொடர்புகளை எளிதாக்குவதற்கு, 2012 ஆம் ஆண்டு தொடக்கம் நோர்வே நாட்டிற்கு இரண்டு புலமைப்பரிசில், அனுகூலங்களை ஆரம்பிப்பதற்கு இலங்கை முன்முயற்சி எடுத்துள்ளது. ஒருவர் மற்றவரின் செழிப்புற்ற கலாசாரத்தினை, பாராட்டுவதற்கு மாணவர்களின் பரிமாற்றமானது வழிவகுக்கின்றது. 

இரு நாடுகளினதும் மக்களிடையே நீண்டகாலத்து நட்புறவினையும் மற்றும் புரிந்துணர்வினையும் அடைவதற்கு ஒரு கெட்டியான அஸ்திவாரத்தினை அமைக்க வழிவகுப்பதற்கும், வளர்ச்சியடையும் கலாசார தொடர்புகளும் மற்றும் பரிமாற்றமானது.

மக்கள் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு ஒரு ஊக்கியாகும். இது சம்பந்தமாக மார்ச் மாதத்தில் நடந்தேறிய யாழ்ப்பாண சங்கீத கலைநிகழ்ச்சிகளுக்கு ஆதரவினை வழங்கியமைக்கு நான் மேன்மை தங்கிய தூதுவர் கிடேட் லொச்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .