2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 மே 24 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ்ப்பாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின்; வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவை சமூக சேவைகள் அமைச்சு நேற்று வியாழக்கிழமை வழங்கியுள்ளது.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் அப்பிரதேச செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்கினார்.

இதன்போது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள 13 பேருக்கும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 2 பேருக்கும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒருவருக்கும் இக்கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. தலா 25,000 ரூபா படி இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நெடுந்தீவு பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளி ஒருவருக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவாக  ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .