2025 ஜூன் 19, வியாழக்கிழமை

அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்: இமெல்டா சுகுமார்

Suganthini Ratnam   / 2013 மே 24 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.கே.பிரசாத்

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் உறுதியளித்துள்ளார்.

யாழ். கோப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தபோதே, அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இவர்கள் தங்களுக்கான வீட்டு வசதிகள், மலசலகூட வசதிகள் தொடர்பிலும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் கணினி வசதி  தொடர்பிலும் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்தத் தேவைகள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி அதற்குரிய ஏற்பாடுளை விரைவில் செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், மாற்றுத்திறன் கொண்ட சிறுவன் ஒருவனுக்கு பாடசாலை உபகரணங்களையும் அவர் வழங்கினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .