2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வெசாக் தினத்தையிட்டு பாதுகாப்பு படையினரால் பசுமாடுகள் வழங்கல்

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
 
வெசாக் தினத்தையிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு பசுமாடுகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
இன்று காலை மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டு சிறப்பித்தார்.
 
தென்னிலங்கையில் வசிக்கும் கொடையாளி ஒருவரின் பங்களிப்புடன் அந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் ஆலயத்திற்கும் மானிப்பாய் பிரதேசத்தில் வசிக்கும் வருமானம் குறைவாகப் பெறும் 8 குடும்பங்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
இந்த நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, 51ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிக்கேடியர் சந்தண குணவர்த்தன, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் முரளிதரன், உடுவில் பிரதேச செயலர் நந்தகோபன், 513ஆவது படைப்பிரிவின் தளபதி, இராணுவ உயரதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .