2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நயினா தீவிற்கு விசேட போக்குவரத்து சேவை

Kogilavani   / 2013 மே 28 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு நயினா தீவிற்கு விசேட போக்குவரத்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் எதிர்வரும் ஜுன் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால், போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ்.அரச அதிபர் தலைமையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பொலிஸார் கடற்படை, பிரதேச செயலர்களுக்கு இடையில்; நேற்று நடைபெற்றது.

இங்கு கருத்துதெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,

'நயினா தீவு ஆலய உற்சவத்தினை முன்னிட்டு, பொதுமக்கள் எதுவித தடங்களுமின்றி போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் படகு சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

22, 23, 24 ஆம் திகதிகளில் முக்கிய திருவிழா காலங்களில் காலை 6 மணி முதல் இரவு 12 மணிவரை விசேட படகு சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

குடிநீர் வசதிகளுக்காக காலை 6.00 முதல் 10.00 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையும் நீர் விநியோகம் செய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது' என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .