2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். கோட்டை புனரமைப்பு

Kogilavani   / 2013 மே 28 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா

யாழ்.நகரிலுள்ள கோட்டை பலகோடி ரூபா செலவில் அரசினால் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

போத்துக்கேயர் இலங்கையின் வடபகுதியில் தமது பெயரை நிலைநாட்டும் நோக்கில்; 1619ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையினை நிறுவினர்.

1658ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டு பின்னர் இடிக்கப்பட்டு மீண்டும்  தற்போது காணப்படும் ஐந்து பக்கங்கள் கொண்ட நட்சத்திர வடிவிலான கோட்டை உருவாக்கப்பட்டது.

பின்னர் இக் கோட்டை 1795ஆம் ஆண்டு எந்தவித போராட்டமும் இன்றி ஆங்கிலேயர் வசமானது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர் வசமே இக் கோட்டை காணப்பட்டது.

இக்கோட்டை கடந்த கால யுத்தத்தின் போது பீராங்கித் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. 

இக்கோட்டையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்தின்; பல கோடி  ரூபா செலவில் தற்போது புனரமைக்கப்பட்;டு வருகின்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .