2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கொலை குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுதலை

Kanagaraj   / 2013 மே 30 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கொலை குற்றஞ்சாட்டப்பட்ட நபரொருவர் யாழ். மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுதலைச்செய்யப்பட்டுள்ளார்.
இளவாளை தெற்கு பெரிய விளானைச் சேர்ந்த விநாயகமூர்த்தி விஜயகுமார் என்பவரே இவ்வாறு விடுதலைச்செய்யப்பட்டுள்ளார்.

அளவெட்டி தெற்கு அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பையா தர்மலிங்கம் என்பவரின் தலையை வெட்டி 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி கொலை செய்த குற்றச்சாட்டில் அளவெட்டி பொலிஸாரால் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்து செய்யப்பட்டவரை பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது அவரை  விளக்கமறியலில் வைக்க்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யூரி சபை முன்னிலையில் 2010  ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டவரின், சகோதரன் மன்றில் சாட்சியமளித்துள்ளார்.

சாட்சியத்தின் போது, குறித்த நபர் கொலை செய்யப்பட்டமையும், அவரது வாகனம் தீ வைக்கப்பட்டமையும் காணவில்லை என்று கூறியுள்ளார்.

அதேவேளை, சாட்சி அரச சட்டவாதியினால் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி குறுக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் பிரதிவாதியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு   நிரூபிக்கப்படாமையினால், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை குற்றவாளியாக காணமுடியாதென்றும், சூழ்நிலைச் சான்றுகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியாக கருதமுடியாதென்றும் சுட்டிக்காட்டிய  யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர்  சந்தேக நபரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .