2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
 

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டு வாழம் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

511 படைப்பிரிவின்  கீழ் உள்ள 5 பற்றலியனின் ஏற்பாட்டில் 'நெதர்லாந்து இலங்கை நாள்' அமைப்பின் நிதியுதவியுடன் இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

5 ஆவது பட்டலியன் படைப்பிரிவின் தளபதி கேணல் ஜீ.ஏ.எல் கீஸ்ரிசிறி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டு வாழ்வாதார உதிவிகளை வழங்கிவைத்தார்.

இதன்போது, 17 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா செலவில் 30 பேருக்கு இந்த வாழ்வாதார உதிவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 10  மாடுகள், 6 ஆடுகள், 11 தையல் இயந்திரம்;, 2 நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் 100 கோழிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஹெட்டியராட்சி, நெதர்லாந்து இலங்கை நாள் அமைப்பின் தலைவர், 511 ஆவது படைப்பிரின் தளபதி உட்பட படை உயர் அதிகாரிகள், பொது மக்கள உட்பட  பலர்; கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .