2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்,  சுமித்தி தங்கராசா


யாழ்.மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) ஏற்பாட்டில்  நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் இந்நிகழ்வு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தோனந்தா கலந்துகொண்டு நியமன கடிதங்களை  வழங்கிவைத்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின் மற்றும் சமூர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், யாழ்.மநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, பொதுமக்கள், சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது யாழ்.மாவட்டத்தில் 252 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸதர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நியமனமனமானது, தொடர்ச்சியாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1000 பேருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .