2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஊஞ்சல் கயிறு இறுகி உரும்பிராய் சிறுமி பலி

Kanagaraj   / 2013 ஜூன் 04 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த போது அதன் கயிறு இறுகி சிறுமியொருவர் பலியான சம்பவமொன்று உரும்பிராய் மேற்கு அன்னங்கை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த 14 வயதான காந்தன் உசாளினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த வேளை அதன் சிறுமியின் கயிறு கழுத்தில் சிக்கியுள்ளது. சிறுமியை உடனடியாக மீட்டெடுத்த  முச்சக்கரவண்டியில்  யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஐவத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.  சிறுமியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .