2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வீதி விளக்குகள் இனந்தெரியாதவர்களால் சேதம்

Kogilavani   / 2013 ஜூன் 06 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

ஏழாலை மேற்கு பகுதியில், வலி.தெற்கு பிரதேச சபையினால் பொருத்தப்பட்ட ஆறு வீதி விளக்குகளும் இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மைக் காலமாக, பொதுமக்களின் தேவை கருதி வலி.தெற்கு பிரதேச சபை, வீதி விளக்குகளை கட்டம் கட்டமாக பொருத்தி வருகின்றது.

இந்நிலையிலேயே, இனந்தெரியாத நபர்கள் வீதி விளக்குகளை சேதப்படுத்தும் விசமத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு வேளைகளில் சந்திகளில் இருந்து மது அருந்துபவர்களே இத்தகைய விசமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகளானது திருடர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவதால்  தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .