2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு

Kogilavani   / 2013 ஜூன் 08 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு கடற்படை முகாமைச் சேர்ந்த பி.எம்.எஸ்.சம்பத் (வயது 25) என்ற கடற்படை சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த வேளை அவர்களை பிடிப்பதற்கு புங்குடுதீவு கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை சிப்பாய்கள் மூவர் சென்றுள்ளனர்.

அதன்போது படகு கவிழ்ந்ததில் மூன்று கடற்படை சிப்பாய்களும் காணாமல் போயுள்ளனர்.  காணாமல் போனவர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் ஒருவர் இன்று சடலமாக மீட்டுள்ளார்.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .