2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சிறார்களுக்கு ஆரோக்கிய பானங்கள் கையளிப்பு

Kanagaraj   / 2013 ஜூன் 08 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


கட்டைக்காடு பகுதி சிறார்;களுக்கு ஆரோக்கிய பானங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கட்டைக்காட்டு பகுதியில் உள்ள சிறுவர்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த பானங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

55 வது படைப்பிரிவும் டெல்மேஜ் நிறுவனமும் இணைந்தே  இவற்றை வழங்கியுள்ளனர்.

சுமார் 1.1 மில்லியன் சிறுவர்களுக்கு பானம் மற்றும் 3000 பைகட் மாம் சோய்ஸ்  பிஸ்கட் வகைகளும் கையளிக்கப்பட்டுள்ளன.
மருதங்கேணி ஆதார வைத்தியசாலையில் வைத்து பிரதான மருத்துவ அதிகாரி டாக்டர் இ.கனகரட்ணம் மற்றும் ரி. உமாபதிசிவம் ஆகியோர் இணைந்து கையளித்துள்ளனர்.

இந்நிகழ்வில், 551 படை பிரிவின் பிhகேடியர் எஸ்.எம்.எஸ்.பி.வி. சமரகோன், மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் மருதங்கேணி வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .