2025 ஜூன் 19, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டி தடம்புரள்வு; மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 10 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ். கரந்தன் சந்தி புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பத்மலிங்கம் அனெஸ்ரின் (வயது 20), புகையிரத வீதி சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் சுஜீந்திரன் (வயது 27) ஊரெழு பகுதியைச் சேர்ந்த துரைசாமி லோகாஸ் (வயது 23) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .