2025 ஜூன் 19, வியாழக்கிழமை

அரசுடன் இணைவு?; மறுக்கிறார் வினோ எம்.பி

Menaka Mookandi   / 2013 ஜூன் 14 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் வினோ எம்.பி.க்கும் இடையில் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் கேட்டபோது, 'அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போகிறேன் என்று வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது' என்று குறிப்பிட்டார்.

'மக்கள் எமக்கு வாக்களித்து, எம்மை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்திருக்கின்றார்கள். மக்களின் ஆணையை மீறி நாங்கள் ஒரு போதும் செயற்பட மாட்டோம்' என்றும் அவர் தெரிவித்தார்.

'மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரநிதிகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர்களுடன் சந்திப்பது வழமையானது. அதிலும் வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நான், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கடற்தொழிலில் தொடர்பில் ஏற்பட்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடினேன்' என்றும் அவர் தெரிவித்தார்.

'அமைச்சர் பசிலுடன் எமது ரெலோ அமைப்பு சார்பாக எமது அனைத்து கட்சி உறுப்பினர்களும் சந்தித்திருந்தோம். ஒரு காலத்தில் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் செயற்பட முடியாத காலகட்டத்திலும் அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.

புகைப்படமொன்றினை வைத்துக்கொண்டு தவறான செய்திகள் வெளியாகியுள்ளமை கவலையளிக்கிறது' என்று வினோ எம்.பி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • A.N.Ali Friday, 14 June 2013 01:50 PM

    அவரவர் சௌக்கியம் தான்...

    Reply : 0       0

    maddy Friday, 14 June 2013 04:22 PM

    அவர் மற்றவர்கள் மாதிரி இல்லை...

    Reply : 0       0

    tharakki Friday, 14 June 2013 07:09 PM

    "அமைச்சர் பசிலுடன் எமது ரெலோ அமைப்பு" என உச்சரிப்பதன் உள் அர்த்தம் வாக்களித்த மக்களின் தமிழ் தேசியத்தை பின் கதவால் அடமானம் வைப்பதா? உங்கள் தேசியம் வாயளவில் மட்டும்தானா?

    Reply : 0       0

    piloman Tuesday, 18 June 2013 11:44 AM

    ஐயா எல்லோரும் இதைத்தான் செய்கிறார்கள்... என்ன வெளியில் சொல்ல முடியாது, சொன்னால் அடுத்தமுறை சீற்று கிடைக்காது. ஏதோ காலத்தை ஓட்டுவம் என்று இவையின்ர செயற்பாடு போகுது. அவையின்ர போக்கில விடுவம்...

    Reply : 0       0

    nisanthan Tuesday, 18 June 2013 11:47 AM

    வினோ எம்பி அரசுடன் இணைவதில் ஆச்சரியப்படுவது ஒன்றும் இல்லை. கூட்டமைப்பின் முக்கால் வாசிப்பேர் (பெரும் தலைகள் உட்பட) அரசுடன் தானே நிக்கிறார்கள்...

    Reply : 0       0

    newman Tuesday, 18 June 2013 11:50 AM

    ஏதோ யாருடன் சேர்ந்தாவது இவர்கள் வாழ்ந்திட்டுப் போகட்டும்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .