2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தாதிய உத்தியோகஸ்தர்கள் ஒரு மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் 5 அம்ச கோரிக்கைகளை  முன்வைத்து எதிர்வரும் 19ஆம் திகதி 1 மணித்தியாலய பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தர்கள் சங்க தலைவர் நல்லையா நற்குணராஜா தெரிவித்தார்.

தாதிய உத்தியோகஸ்தர் சங்கத்தின் தாய் சங்க ஏற்பாட்டின் அடிப்படையில், எதிர்வரும் 19ஆம் திகதி இந்த பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்பு, மேலதிக கொடுப்பனவு, மாகாண பட்டதாரிகளை உள்வாங்கள், 5 நாள் வேலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .